Saturday, June 25, 2011

வளர்ந்த கலை மறந்துவிட்டாள் - பாடல்











வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? - தாலி
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா?

காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்த
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா?
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா? - அதை
மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா?

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா? - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா?

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

•••••••
 
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைப்படம்: காத்திருந்த கண்கள்
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


0 comments: