Sunday, July 24, 2011

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்


படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
-----------------------------------------

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Monday, July 18, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே



-------------------------------------------------------- படம்: உயர்ந்த மனிதன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதைத் தவிர வேறெதைக் கண்டோம் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம் பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? அமைதி எங்கே? (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே) அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான் (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

Saturday, July 16, 2011

மல்லிகை-என் மன்னன் மயங்கும்


திரைப்படம் -தீர்க்க சுமங்கலி
பாடலாசிரியர்-கவிஞர் வாலி
இசையமைப்பாளர்-எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் -வாணி ஜெயராம், 
--------------------------------------------------------------------------
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

நீ வருவாய் என நான் இருந்தேன்


நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்

ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வென்பனி தென்றல் உள்ள வரையில்

உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

Friday, July 15, 2011

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்






படம் -நவராத்திரி 
இசை-K.V.மகாதேவன்
பாடியவர் - டி.எம்.சவுந்தரராஜன்
எழுதியவர் -கண்ணதாசன்,.




இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன
உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன
எனக்கும் புரியாது
இருப்பது சில நாள்
அனுபவிப்போமே
எதுதான் குறைந்துவிடும்
எதுதான் குறைந்துவிடும்

பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா 

பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா

கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா
கல்லினில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்துவிட்டார் 

















.

Monday, July 4, 2011

உன் மேல கொண்ட ஆச..





உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்...

உன் மேல கொண்ட ஆச...........

சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்

முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே
மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே

நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி
மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே...
என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல....)

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல ...)

படம் - காதல் ஜோதி
பாடல் - அண்ணா





Sunday, July 3, 2011

தூங்காத கண்ணென்று ஒன்று.

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)





படம்: குங்குமம்.
இசை : K.V.மகாதேவன்.
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.

நான் உன்னை அழைக்கவில்லை


நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

Friday, July 1, 2011

எத்தனை அழகு இருபது வயதினிலே...








ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
(ஒ..ஒ..)

கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
(ஒ..ஒ..)

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜடையில் கூறாதோ
கூறாதோ.. ஜடையில் கூறாதோ.. பதில் ஜடையில் கூறாதோ
முன்னும் பின்னும் மின்னம் கன்னம் வண்ணம் கொள்ளதோ
(ஒ..ஒ..)

திரைப்படம் : அதே கண்கள் (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
வரிகள் : தெரியலைங்கோ
இசை : வேதா
நடிகர்கள் : ரவிச்சந்திரன், காஞ்சனா