Wednesday, April 11, 2012

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை






புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
(லொளலொளலொளாயி)
அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது
ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை;
கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய பிள்ள ஆராரோ

புருசஷன் மனதிலே பூத்திருந்தேன்
ஆமாமா
தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ஆமாமா
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ
வயசு இருபத்தி ஆறாச்சு
ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க
அம்மா கதைய நீ கேளாயோ?
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பிள்ள ஆராரோ

ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும்
காதலினாலே திரும்பி வந்தேன்
போகாது ஐயா, போகாது - எங்கு
போனாலும் ஆசை போகாது
ஆராரோ அடி ஆராரோ - ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ

ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு
இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு

ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி
அடுத்தது நீயுந்தான் தாலாட்டு
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ



Thursday, March 22, 2012

மையேந்தும் விழியாட

திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி


மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....

இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

Wednesday, March 7, 2012

மங்கையரில் மகராணி


பாடல் காணொளிக்கு



மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....


படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


*

Tuesday, February 28, 2012

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…

.



பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…
காணாத கண்களை காணவந்தாள்…
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்…(2)

மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்
(பாடாத பாட்டெலாம்)

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா
(பாடாத பாட்டெலாம்)

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா..
(பாடாத பாட்டெலாம்)

பாடியவர் : PB.ஸ்ரீநிவாஸ்
படம் : வீரத்திருமகன்
இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி

..


Wednesday, November 9, 2011

பொன்னை விரும்பும் பூமியிலே

.



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி


.


Monday, November 7, 2011

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..




கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

படம் - பறக்கும் பாவை
பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி. சுசீலா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி

.

Tuesday, November 1, 2011

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: திரு.இளையராஜா
பாடல்: திரு.பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள் :பாலசுப்பிரமணியம்.எஸ்.பி ,
                           எஸ்.ஜானகி 


ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்....

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்...

மஞ்சளின் மஹாராணி
குங்கும பெருந்தேவி
உன்னால் பொன்னாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கதின் நிழலை கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே 
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேதம் மாறாதோ
மாறும் நன்னாள்
என்னால் காண்பேனோ
புன்னகையாலே என்னை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று 

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பார்த்திருப்போம்
ஒரு நாள் 
உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்