Saturday, June 23, 2012

பாரடி கண்ணே கொஞ்சம்..









படம் - வல்லவனுக்கு வல்லவன்

குரல்கள் - சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்
பாடல் - கண்ணதாசன்
இசை - வேதா
நடிகர்கள் - அசோகன், மனோகர், சாவித்திரி



பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)

பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)

அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அந்தர லோகத்து பெண்ணா

உடையைப் பார்த்தவுடன் மனது பாதி கெட்டு
இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு
ஆ மனிதனான என்னை மடையனாக்கி விட்டு
மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன
ஆ உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு
ஆ உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு
ஆ துடிக்கும் ஏழை நெஞ்சை அடக்கித் தூங்க விட்டு
ஆ நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு
அடி வாடி என் சிட்டு

அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அந்தர லோகத்து பெண்ணா
அந்தர லோகத்து பெண்ணா

அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி
அழகுக்கு ஏனடி வஞ்சம்
அடைந்து விட்டோமடி தஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)

ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ

அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி
இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி
ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி
ஆ இருவராக வன்ந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி
ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி
ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. இல்லையடி
பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை
பெருமையாக கருதும் வீரரடி

ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ

மாப்பிள்ளை ராஜா நில்லு
என் வார்த்தைக்கு பதில் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கி கொள்ளு (பைத்தியமே) (பாரடி)


••

Wednesday, April 11, 2012

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை






புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
(லொளலொளலொளாயி)
அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது
ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை;
கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய பிள்ள ஆராரோ

புருசஷன் மனதிலே பூத்திருந்தேன்
ஆமாமா
தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ஆமாமா
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ
வயசு இருபத்தி ஆறாச்சு
ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க
அம்மா கதைய நீ கேளாயோ?
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பிள்ள ஆராரோ

ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும்
காதலினாலே திரும்பி வந்தேன்
போகாது ஐயா, போகாது - எங்கு
போனாலும் ஆசை போகாது
ஆராரோ அடி ஆராரோ - ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ

ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு
இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு

ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி
அடுத்தது நீயுந்தான் தாலாட்டு
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ



Thursday, March 22, 2012

மையேந்தும் விழியாட

திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி


மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....

இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

Wednesday, March 7, 2012

மங்கையரில் மகராணி


பாடல் காணொளிக்கு



மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....


படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


*

Tuesday, February 28, 2012

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…

.



பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…
காணாத கண்களை காணவந்தாள்…
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்…(2)

மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்
(பாடாத பாட்டெலாம்)

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா
(பாடாத பாட்டெலாம்)

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா..
(பாடாத பாட்டெலாம்)

பாடியவர் : PB.ஸ்ரீநிவாஸ்
படம் : வீரத்திருமகன்
இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி

..


Wednesday, November 9, 2011

பொன்னை விரும்பும் பூமியிலே

.



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி


.


Monday, November 7, 2011

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..




கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

படம் - பறக்கும் பாவை
பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி. சுசீலா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி

.

Tuesday, November 1, 2011

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: திரு.இளையராஜா
பாடல்: திரு.பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள் :பாலசுப்பிரமணியம்.எஸ்.பி ,
                           எஸ்.ஜானகி 


ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்....

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்...

மஞ்சளின் மஹாராணி
குங்கும பெருந்தேவி
உன்னால் பொன்னாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கதின் நிழலை கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே 
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேதம் மாறாதோ
மாறும் நன்னாள்
என்னால் காண்பேனோ
புன்னகையாலே என்னை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று 

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பார்த்திருப்போம்
ஒரு நாள் 
உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

Friday, October 21, 2011

விழியே கதை எழுது...

.
படம்: உரிமைக்குரல்
இசை: மெல்லிசை மன்னர்
இயக்கம்: ஸ்ரீதர்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - கே.ஜெ. ஏசுதாஸ், பி. சுசீலா




விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

 •

Sunday, July 24, 2011

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்


படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
-----------------------------------------

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Monday, July 18, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே



-------------------------------------------------------- படம்: உயர்ந்த மனிதன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதைத் தவிர வேறெதைக் கண்டோம் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம் பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? அமைதி எங்கே? (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே) அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான் (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

Saturday, July 16, 2011

மல்லிகை-என் மன்னன் மயங்கும்


திரைப்படம் -தீர்க்க சுமங்கலி
பாடலாசிரியர்-கவிஞர் வாலி
இசையமைப்பாளர்-எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் -வாணி ஜெயராம், 
--------------------------------------------------------------------------
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

நீ வருவாய் என நான் இருந்தேன்


நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்

ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வென்பனி தென்றல் உள்ள வரையில்

உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

Friday, July 15, 2011

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்






படம் -நவராத்திரி 
இசை-K.V.மகாதேவன்
பாடியவர் - டி.எம்.சவுந்தரராஜன்
எழுதியவர் -கண்ணதாசன்,.




இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன
உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன
எனக்கும் புரியாது
இருப்பது சில நாள்
அனுபவிப்போமே
எதுதான் குறைந்துவிடும்
எதுதான் குறைந்துவிடும்

பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா 

பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா

கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா
கல்லினில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்துவிட்டார் 

















.

Monday, July 4, 2011

உன் மேல கொண்ட ஆச..





உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்...

உன் மேல கொண்ட ஆச...........

சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்

முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே
மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே

நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி
மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே...
என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல....)

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல ...)

படம் - காதல் ஜோதி
பாடல் - அண்ணா





Sunday, July 3, 2011

தூங்காத கண்ணென்று ஒன்று.

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)





படம்: குங்குமம்.
இசை : K.V.மகாதேவன்.
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.

நான் உன்னை அழைக்கவில்லை


நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

Friday, July 1, 2011

எத்தனை அழகு இருபது வயதினிலே...








ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
(ஒ..ஒ..)

கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
(ஒ..ஒ..)

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜடையில் கூறாதோ
கூறாதோ.. ஜடையில் கூறாதோ.. பதில் ஜடையில் கூறாதோ
முன்னும் பின்னும் மின்னம் கன்னம் வண்ணம் கொள்ளதோ
(ஒ..ஒ..)

திரைப்படம் : அதே கண்கள் (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
வரிகள் : தெரியலைங்கோ
இசை : வேதா
நடிகர்கள் : ரவிச்சந்திரன், காஞ்சனா



Wednesday, June 29, 2011

இரு பறவைகள் மலை முழுவதும்

படம் : நிறம் மாறாத பூக்கள்
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாத பூந்தென்றலே
எங்கெங்கும் இதுபோல சோகங்களே
தீராதோ இது மாறாதோ
கலைந்தது கவிதைகள் ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்