Wednesday, April 11, 2012

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை






புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
(லொளலொளலொளாயி)
அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது
ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை;
கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய பிள்ள ஆராரோ

புருசஷன் மனதிலே பூத்திருந்தேன்
ஆமாமா
தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ஆமாமா
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ
வயசு இருபத்தி ஆறாச்சு
ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க
அம்மா கதைய நீ கேளாயோ?
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பிள்ள ஆராரோ

ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும்
காதலினாலே திரும்பி வந்தேன்
போகாது ஐயா, போகாது - எங்கு
போனாலும் ஆசை போகாது
ஆராரோ அடி ஆராரோ - ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ

ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு
இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு

ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி
அடுத்தது நீயுந்தான் தாலாட்டு
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ



0 comments: