Thursday, March 22, 2012

மையேந்தும் விழியாட

திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி


மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....

இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

Wednesday, March 7, 2012

மங்கையரில் மகராணி


பாடல் காணொளிக்கு



மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....


படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


*