Wednesday, November 9, 2011

பொன்னை விரும்பும் பூமியிலே

.



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி


.


Monday, November 7, 2011

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..




கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

படம் - பறக்கும் பாவை
பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி. சுசீலா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி

.

Tuesday, November 1, 2011

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: திரு.இளையராஜா
பாடல்: திரு.பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள் :பாலசுப்பிரமணியம்.எஸ்.பி ,
                           எஸ்.ஜானகி 


ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்....

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்...

மஞ்சளின் மஹாராணி
குங்கும பெருந்தேவி
உன்னால் பொன்னாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கதின் நிழலை கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே 
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேதம் மாறாதோ
மாறும் நன்னாள்
என்னால் காண்பேனோ
புன்னகையாலே என்னை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று 

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பார்த்திருப்போம்
ஒரு நாள் 
உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

Friday, October 21, 2011

விழியே கதை எழுது...

.
படம்: உரிமைக்குரல்
இசை: மெல்லிசை மன்னர்
இயக்கம்: ஸ்ரீதர்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - கே.ஜெ. ஏசுதாஸ், பி. சுசீலா




விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

 •

Sunday, July 24, 2011

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்


படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
-----------------------------------------

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் 

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Monday, July 18, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே



-------------------------------------------------------- படம்: உயர்ந்த மனிதன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்: கண்ணதாசன் பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதைத் தவிர வேறெதைக் கண்டோம் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம் பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? அமைதி எங்கே? (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே) அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான் (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

Saturday, July 16, 2011

மல்லிகை-என் மன்னன் மயங்கும்


திரைப்படம் -தீர்க்க சுமங்கலி
பாடலாசிரியர்-கவிஞர் வாலி
இசையமைப்பாளர்-எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் -வாணி ஜெயராம், 
--------------------------------------------------------------------------
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

நீ வருவாய் என நான் இருந்தேன்


நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்

ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வென்பனி தென்றல் உள்ள வரையில்

உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

Friday, July 15, 2011

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்






படம் -நவராத்திரி 
இசை-K.V.மகாதேவன்
பாடியவர் - டி.எம்.சவுந்தரராஜன்
எழுதியவர் -கண்ணதாசன்,.




இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன
உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன
எனக்கும் புரியாது
இருப்பது சில நாள்
அனுபவிப்போமே
எதுதான் குறைந்துவிடும்
எதுதான் குறைந்துவிடும்

பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா 

பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா

கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா
கல்லினில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்துவிட்டார் 

















.

Monday, July 4, 2011

உன் மேல கொண்ட ஆச..





உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..

தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்...

உன் மேல கொண்ட ஆச...........

சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்

முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே
மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே

நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி
மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே...
என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல....)

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே

ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே

என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு

(உன் மேல ...)

படம் - காதல் ஜோதி
பாடல் - அண்ணா





Sunday, July 3, 2011

தூங்காத கண்ணென்று ஒன்று.

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)





படம்: குங்குமம்.
இசை : K.V.மகாதேவன்.
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.

நான் உன்னை அழைக்கவில்லை


நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

Friday, July 1, 2011

எத்தனை அழகு இருபது வயதினிலே...








ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
(ஒ..ஒ..)

கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
(ஒ..ஒ..)

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜடையில் கூறாதோ
கூறாதோ.. ஜடையில் கூறாதோ.. பதில் ஜடையில் கூறாதோ
முன்னும் பின்னும் மின்னம் கன்னம் வண்ணம் கொள்ளதோ
(ஒ..ஒ..)

திரைப்படம் : அதே கண்கள் (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
வரிகள் : தெரியலைங்கோ
இசை : வேதா
நடிகர்கள் : ரவிச்சந்திரன், காஞ்சனா



Wednesday, June 29, 2011

இரு பறவைகள் மலை முழுவதும்

படம் : நிறம் மாறாத பூக்கள்
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாத பூந்தென்றலே
எங்கெங்கும் இதுபோல சோகங்களே
தீராதோ இது மாறாதோ
கலைந்தது கவிதைகள் ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே


படம் : பார் மகளே பார்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கள மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்...

கொடியசைந்ததும் காற்று வந்ததா

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம். செளந்தர்ராஜன், பி.சுசீலா.



கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

(கொடியசைந்ததும்...)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

(கொடியசைந்ததும்...)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடிவந்ததும் தேடி வந்ததௌம்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா

(கொடியசைந்ததும்...)

உறவுகள் தொடர்கதை



படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்



உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

(உறவுகள் தொடர்கதை...)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

(உறவுகள் தொடர்கதை...)

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை
இசை: மகாதேவன்
பாடியவர்: எஸ்.ஜானகி

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனமும் சென்றது
மறு முறை காணவே மனமும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்


பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

படம்: மணப்பந்தல் (1962)
கண்ணாதாசன் 

விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

Saturday, June 25, 2011

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா



ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
 ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


படிசிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் காவல் இருந்தான்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்

உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் தானும் இருந்தார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை

நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா நாய்கள் மேலடா

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது



படம்: பாவ மன்னிப்பு.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களை தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை பெண்மனது போர்களம் ஆகும்

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
தெய்வமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

வசந்தத்தில் ஓர் நாள்





படம் :மூன்று தெய்வங்கள் (1971)
பாடியவர் :P.சுசீலா
இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்
இராகம் : தர்பாரி கானடா

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே

பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி

தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி


http://www.youtube.com/watch?v=ld089m7EDaA&NR=1




ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹொ ஓ ஓ ஓஓ ஹோ 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
என்னை எடுத்து தன்னை கொடுத்து 
போனவன் போனாண்டி ஓ ஓ ஹோய் 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ...... 

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி.....ஹோய் 
.போனவன் போனாண்டி..ஹோய்..ஹோய்..ஹோய் 
போனவன் போனாண்டி 
என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 

ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி.. ஓய் 
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி..ஹொய் ஹோய் ஹோய்...வந்தாலும் வருவாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
வாசலை தேடி வாழ்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி..ஹோய் 
வந்தாலும் வருவண்டி ஹோய் ஹோய் ஹோய் 
போனவன் போனாண்டி 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ......
----------------------------------------------------



இயற்றியவர்: கவிஞர் வாலி
திரைப்படம்: படகோட்டி 

இசை :எம்.எஸ்.வி 

*