Saturday, June 25, 2011

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா



ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
 ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


படிசிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் காவல் இருந்தான்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்

உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் தானும் இருந்தார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை

நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா நாய்கள் மேலடா

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

0 comments: